12058 – தொடக்குந் தொடர்பும் அல்லது ஆசௌச விளக்கம்.

சி.அப்புத்துரை, சு.செல்லத்துரை. கொழும்பு 6: வி.மனோன்மணி, யாழ்.தெல்லிப்பழை விஜயரத்தினம் விமலநாதன் அந்தியேட்டித் தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

xxi, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

ஆசௌசம் என்பது விதிவிலக்கு காலமாகும். ஏறத்தாழ எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் இவை விளக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறே சோமசம்பு சிவாச்சாரியார் செய்த சோமசம்பு பத்ததி தமிழ் நாட்டில் வழக்கில் உள்ளது. சைவத்தின் இருபத்தெட்டு ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால் மேற்சொன்ன தொகுப்பு நூல்களான பத்ததிகள் மிகவும் பயனுள்ள கைநூல்கள் ஆகின்றன. ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது சந்தோஷத்தைக் கொண்டாடும் காலமாகும். பாதிக்கப்பட்டவர்கள் இவ்விதமான மன அதிர்வுகளிலிருந்து தமது வழமை நிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையே ஆசௌச காலம் ஆகும். இந்நூலில் ஆசௌசம் பற்றிய கருத்துக்களை, விதிமுறை களை இலகுபடுத்தித் தந்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24551).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,

14490 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 3-4.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞரகளின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹுவோஸ் நிறுவனம், 1வது

12716 – ஆரோக்கியம் தேகப்பயிற்சி.

உடுவில் வே.மு.சபாரத்தினசிங்கம். யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1958, 1வது பதிப்பு, 1948, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1948 (யாழ்ப்பாணம்: ம.வே.திருஞானசம்பந்தன், சைவப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). (2), 108 பக்கம்,

14163 மட்டுவில் வடக்கு பன்றித் தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில் பூர்வீக சரித்திர வரலாறும் கும்பாபிஷேக வைபவமும்.

க.சிவகுருநாதன், நா.நல்லதம்பி (தொகுப்பாசிரியர்கள்). மட்டுவில்: தேவஸ்தான வெளியீடு, பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவில், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட கூட்டுறவுச் சங்க அச்சகம்). (16), 70 பக்கம், புகைப்படங்கள்,

12148 – திருமந்திரம்: ஓர் அறிமுகம்.

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxviii, 118