12093 – இந்து தருமம் 1991-1992: பேராதனை பல்கலைக்கழக பொன்விழா சிறப்பு மலர்.

த.வேலுப்பிள்ளை (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1992. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டுகொடல்ல வீதி).

x, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

வாழ்த்துரைகள் ஆசியுரைகளுடன் விரியும் இம்மலரில் இந்துமதம் சவாலொன்றினை எதிர்கொண்டவாறு 19ஆம் 20ஆம் நூற்றாண்டுச் சீர்திருத்த இயக்கங்கள் (சி. தில்லைநாதன்), எங்கள் அகம் மலர அருள் புரிவாய் (ஞானாம்பிகை விஸ்வநாதன்), இந்துமதம் சில குறிப்புகளும் கருத்துகளும் (எஸ்.லோகிதராஜா), இலங்கையின் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிறுவிய கதிர்வேலாயுத சுவாமி கோவில்கள் (ந.வேல்முருகு), எமது இன்றைய நிலைக்கு நாமே பொறுப்பு (வளர்மதி சின்னராசா), மானுடம் பாடாத மகளிர் (துரை மனோகரன்), பக்திப் பாடல்கள் (பிச்சையப்பா கணேசவரதன்), மானுடரும் கடவுளரும் (சி.சிவசேகரன்), மனம் எங்கே போகிறது (பா.நித்தியானந்தக் குருக்கள்), சுவாமி விபுலானந்தரின் நோக்கிற் சமயமும் வாழ்வும் (க.அருணாசலம்), சமயகுரவரும் நாவலர் பெருமானும் (பொ. பூலோகசிங்கம்), வள்ளுவத்திலிருந்து சில அன்புத்துளிகள் (மா.அருணாசலம்), ஈழத்து வன்னிமைகளில் சிறுதெய்வ வழிபாடு (இரா.வை.கனகரத்தினம்), சைவ நெறியும் மாண்பும் (கே.வேலாயுதபிள்ளை), சமயமும் வாழ்வும் அதன் பயனும் (மு.சுந்தரச்செல்வன்), குறிஞ்சி அழகன்- கவிதை (பத்மதேவன்), நான் யார்? எம்மைக் கண்டோமா? (அ.ராஜ்குமார்), சிலரின் சிந்தனைகள் (பா.பாலநந்தகுமார்), குறிஞ்சிக் குமரன் ஆலயமும் இந்து மாணவர் சங்கமும் நாற்பதாண்டு கால காலக்கண்ணாடியில் (செ.ரூபசிங்கம்), இந்து தர்மம் பற்றிய ஒரு கண்ணோட்டம் (க.ரவிசங்கர்), பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம் (க.விஜயமோகன்), குறிஞ்சித் தென்றல் (பா.மணிவண்ணன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32284).

ஏனைய பதிவுகள்