12147 – திருமந்திரம் அடிப்படையில் யோகர் சுவாமிகள் அறிவுரைகள்.

எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்).

213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர் சுவாமிகளின் திருவாக்குகளான நாம் அறியோம், முழுவதும் உண்மை, எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை ஆகிய நான்கு திருவாக்குகளையும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் உதவியுடன் தனித்தனிக் கட்டுரைகளாக விளக்கியிருக்கிறார். பக்கம் 78-213 வரை, யோகர் சுவாமிகளின் ‘நற்சிந்தனை’ நூலிருந்து தேர்ந்தெடுத்த அறிவுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21189).

ஏனைய பதிவுகள்

17816 நாளைய தலைமுறையினரைக் கருத்திற்கொண்டு புதிய சிந்தனையுடன் பயணிக்க வேண்டிய தமிழ் இலக்கிய வடிவம்.

பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 6: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012, கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (உடத்தலவின்ன 20802: அச்சிட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே). 16 பக்கம்,