12226 – பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல் (கே.ஜி.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரை).

சி.வி.விக்னேஸ்வரன். சென்னை 600 001: மக்கள் சிவில் உரிமைக் கழகம், பி.யூ.சீ.எல். தமிழ்நாடு/புதுவை, ஹூசைனா மன்ஜில், 255, அங்கப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

09.11.2014அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கே.ஜீ.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரை Safeguarding Security and Sovereignty என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், பின்னர் தொடர்ந்து ‘பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் தமிழிலும் நீதியரசரும், இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம் இது. அமரர் கே.ஜீ.கண்ணபிரான் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக 1994-2009 காலப்பகுதியில் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்