12258 – போரின் பின்-முன்நோக்கிய நகர்வு.

சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 11: அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் (Movement for unity with PowerSharing- MUPS), இல. 72, பாங்க்ஷால் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வடமாகாணசபை முதல்வர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் 2014 பெப்ரவரி 13 ஆம்திகதி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற ‘போருக்குப் பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தேசிய மாநாட்டில் நிகழ்த்திய பிரதான உரையின் மும்மொழிகளிலுமான எழுத்து வடிவம் இதுவாகும். ‘போரின் பின்னரான முன்னோக்கிய நகர்வு என்பது அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய ஐக்கியமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை இங்கே வடமாகாண முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தர்க்கரீதியாக விளக்கியுள்ளார். தேசிய ஐக்கியம் என்ற தலைப்பு, பார்வையற்றோர் ஆளாளுக்கு யானையைத் தொட்டுத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்லும் விடயத்தைப் போல இந்நாட்டில் இருக்கின்றது. அது அப்படி இனிமேலும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. தேசிய ஐக்கியம் என்பது உணரப்படக் கூடிய, புரியக்கூடிய திட்டவட்டமான விடயம் ஆகும். அதற்கான முன்நிபந்தனை சமத்துவம் ஆகும். அந்த சமத்துவம் இனங்களுக்கிடையே அரசியல் அதிகாரங்கள் பகிரப்படும்போது மாத்திரம் சாத்தியமாகும். ஆகவே அரசியல் அதிகார பகிர்வுக்கு எதிரானவர்கள் தான், இந்த நாட்டின் ஐக்கியத்துக்கு எதிரான பிரிவினைவாதிகள். அரசியல் அதிகார பகிர்வுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டின் ஐக்கியத்துக்காகப் பாடுபடுபவர்கள்’. (மனோ கணேசன், முகவுரையில்).

ஏனைய பதிவுகள்

12984 – இராவண தேசம்: திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள்.

திருமலை நவம் (இயற்பெயர்: திரு.சி.நவரத்தினம்). திருக்கோணமலை: வி.மைக்கல் கொலின், தாகம் பதிப்பகம், அனுசரணை, கனடா: உள்ளம் அமைப்பினர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி). xvi, 160 பக்கம்,

14127 சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் தெய்வீகப் பாமாலை: 20ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1995.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பன் இல்லம், இல. 69, வான்றோயன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 14:

12739 – கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்.

க.ந.வேலன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1964. (யாழ்ப்பாணம்: கலைவாணி பிரின்டிங் வேர்க்ஸ்). xii, 231 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21

12010 – நூலகம்.

சத்தியன் தவராஜா. திருச்சிராப்பள்ளி 620017: நூலகம் பேசுகிறது, எண் 9, 16-ஆவது வீதி, குமரன் நகர், 1வது பதிப்பு, 2017. (உறையூர்: காமாட்சி அச்சகம்). (11), 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: