12343 – இமயம் 2012-2013: கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: கே.ஜே. என்ரர்பிரைசஸ்).

233 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

இமயம் ஆண்டுமலரின் மூன்றாவது இதழ் இதுவாகும். கல்லூரியின் பரிசளிப்பு விழாவுடன் இவ்விதழ் வெளிவருகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் இரகுவம்சம் (ஸ்ரீபிரசாந்தன்), சிலப்பதிகாரத்தில் கண்ணகி (க.இரகுபரன்), தலைமைத்துவம் (தனேஸ்வரி ரவீந்திரன்), செந்நெறி இலக்கியத்தில் நாட்டார் இலக்கியத்தின் பங்கு, பாசம்மிகு கதாபாத்திரம் இராமன், வாழ்க்கையை மேம்படுத்தும் மனித விழுமியங்கள் என்பன உள்ளிட்ட மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மலர் ஆசிரியர் குழுவில் கோதை நகுலராஜா, மே.கிருஷ்ணபிள்ளை, ச.பாஸ்கரன், சி.இராஜவரோதயம், சு.சிவரதன், எஸ்.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56903).

ஏனைய பதிவுகள்

17573 மடை திறக்கும் மௌனம்.

சங்கரி சிவகணேசன். தமிழ்நாடு: படைப்பு பதிப்பகம், இல. 8, மதுரைவீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002, 1வது பதிப்பு, 2023. (சென்னை: படைப்பு பிரைவேட் லிமிட்டெட்). 128 பக்கம், விலை: இந்திய ரூபா

12749 – புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா(சுருக்கம்) கலிதொடர் காண்டம்.

புகழேந்திப் புலவர் (மூலம்), வடஇலங்கை தமிழ்நூற் பதிப்பகம் (பதிப்பாசிரியர்கள்).சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi, 98 பக்கம், விலை: ரூபா 1.20, அளவு: 18.5 x