12402 – சிந்தனை: தொகுதி III இதழ் 1 (மார்ச் 1985).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).(6),

145 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24×16.5 சமீ.

ஆங்கிலத்தில் தமிழ் அசைகளின் செல்வாக்கு (பார்வதி கந்தசாமி), காரைக்காலம்மையாரும் அவர் பாடிய பிரபந்தங்களும்-ஓர் ஆய்வு (சந்திரலேகா வாமதேவா), இலங்கையில் தேசிய குடிக்கணிப்புகளும் அவற்றின் குறைநிறைகளும் (கா.குகபாலன்), இலங்கைத் தமிழர்-இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள் பற்றிய சில கருத்துக்கள் (ச.சத்தியசீலன்), தமிழ் மொழியில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை (இரத்தினமலர் கயிலைநாதன்), இலங்கையின் நீர்ப்பாசன அபிவிருத்தியில் வரலாற்றுச் சிறப்பம்சங்கள் (அ.கணபதிப்பிள்ளை), பிரதேச அபிவிருத்திக்கான பொருத்தமான நில வகைப்பாட்டுத் தேர்வு: அளவுசார் ரீதியான அணுகுமுறை (ளு.வு.P. இராஜேஸ்வரன்), இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி இன்றைய காலகட்டத்தில் முகங்கொடுக்கவேண்டிய சில பிரச்சினைகள் (சுசீலா அருளானந்தம்), முத்தையன்கட்டு இளைஞர் குடியேற்றத்திட்டம்: ஒரு விவசாயப் புவியியலாய்வு (இரா.சிவச்சந்திரன்), இலங்கையின் கிழக்குக்கரை மழைவீழ்ச்சி வலயத்தின் மழைவீழ்ச்சித் தளம்பல்கள் (மா.பவனேஸ்வரன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pamp. 4184).

ஏனைய பதிவுகள்

15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xviii,