12484 – தமிழருவி 1994:

கலைவிழாச் சிறப்பிதழ். ச.நவாதரன், க.ஜீவலிங்கம், பா.சுகன்னியா (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 12: Sharp Graphics Pvt Ltd> D.G.2,Central Road)

(96) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழ் விழா கலை நிகழ்வு 1998 அன்று நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிக்கைகள் என்பவற்றுடன், துணைவேந்தர் துரைராஜா (அ.ந.சசிதரன்), பயம் (திருக்கோவில் கவியுவன்), மௌனமான சோகங்கள் (மணிபாரதி), ஓ அவைகட்கு ஐந்தறிவோ (வை.ஆ.சர்மா), சமாதானம் (க. அன்பினி), மனிதத்திற்கு மாலையிடுவோம் (யாழவன்), ஏ மானிடா (எஸ்.ஈ. ஜெயராஜ்) ஆகிய கவிதைகளும், ஏற்றத்தாழ்வுகள் என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14166).

ஏனைய பதிவுகள்