12503 – விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2005.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு: கிரிப்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்).

152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

பாடசாலையில் நவராத்திரி பூஜைக் காலங்களில் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு கன்னிப் பிரசுரமாக ஒக்டோபர் 2001 முதல் வெளியிடப்பட்டுவரும் சிறப்பு மலரின் 2005ஆம் ஆண்டுக்கான இதழ் இது. அரும்பு என்ற பிரிவில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களும், மலர் என்ற பிரிவில் இடைநிலை, உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆக்கங்களும், தாரகை என்ற பிரிவில் மேல்மாகாண மொழித்தினப் போட்டியில் பரிசுபெற்ற இப் பாடசாலை மாணவர்களின் படைப்புக்களும், தேட்டம் என்ற பிரிவில் சைவசமய உணர்வை வளர்க்கும் உத்திமுறைகள் (கு.ஸ்ரீகந்தராஜா), ஓர் ஆசிரியர் உள்ளத்திலிருந்து (சிவகுமாரி புவனராசா), இலங்கை வளம் (சோமசுந்தரம் முரளி), சிவசக்தி விநாயகன் துணை (சோமசுந்தரம் முரளி), சைவசமய வழிபாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஆசௌசங்களும் நீக்கத்துக்கான கால எல்லைகளும் (ம.சிவசுப்பிரமணியம்) ஆகிய ஆசிரியர் படைப்பாக்கங்களும், புது வரவு, ஆசிரியர் தினம்-2004 ஆகிய அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36891).

ஏனைய பதிவுகள்

12723 – சிற்பிகள்.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). சாவகச்சேரி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, சித்திரை 2013. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவை, அல்லாரை வீதி, மீசாலை). 72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14929 கருணையோகம்: பேராசிரியர் செ.யோகராசாவின் பணிநயப்பு விழா சிறப்பு மலர் 2016.

மலர்க் குழு. மட்டக்களப்பு: பேராசிரியர் செ.யோகராசா பணிநயப்பு விழாச்சபை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், 496ஏ, திருமலை வீதி). 258 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

14915 என் பெயர் விக்டோரியா: நதியைக் கடக்க முனைந்தவள்.

தொந்தா விக்டோரியா (ஸ்பானிய மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 220

14674 உலக காவியம்: அறிவியல் ஆன்மீக காவியம்.

பாரதிபாலன் (இயற்பெயர்: ஜெயகுமார் குமாரசுவாமி). யாழ்ப்பாணம்: மகரிஷி பதிப்பகம், 55, ஆடியபாதம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). (24), 98 பக்கம்,