12530 நாட்டார் பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 12: பீனிக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், ழே.ஊ.பு.6, செபஸ்தியன் தொடர்மாடிக் குடியிருப்பு, புனித செபஸ்தியார் வீதி, குணசிங்கபுர).

xii, 124 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 22×15 சமீ., ISDN: 978-955-7226-04-0.

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது. நாட்டார் பாடல்கள், கடவுள் வாழ்த்து, தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், மழைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், மலையக நாட்டார் பாடல்கள், இஸ்லாமிய நாட்டார் பாடல்கள், காதல் பாடல்கள் எனப் பதினொரு பிரிவுகளில் இலங்கையின் பல பாகங்களிலும் வழக்கிலிருந்த நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்