12532 – போருக்குப் பின் தென் மோடி நாட்டுக்கூத்து.

பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை (புனைபெயர்: தூயமணி). யாழ்ப்பாணம்: இளைஞர் கலைக்கழகம், குருநகர், 1வது பதிப்பு, ஆடி 2006. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.அச்சகம்).

x, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

அமரர் தூயமணி அவர்கள் படைத்த தென்மோடி நாட்டுக்கூத்து இதுவாகும். தமிழ்நாட்டு வேளிர்குல மரபிலே வந்த முதலாம் புலிகேசி மன்னன் காலத்தைய ஒரு வரலாற்று நிகழ்வினை இந்நாட்டுக்கூத்து கதையாக ஆசிரியர் அமைத்துள்ளார். பாரிசில் வாழும் டேமியன் சூரி, இராசதுரை குமார், குருசுமுத்து பீலிக்ஸ், ஆகியோரின் முயற்சியின் பயனாக அமரர் பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள நூல் இது. தாயகத்திலிருந்து கிளமென்ற் மாட்டின் நெல்சன், அவர்களின் துணையுடன் குருநகர் இளைஞர் கழகத்தின் வெளியீடாக இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 183247CC).

ஏனைய பதிவுகள்

Betting Resources

Articles Just what are Your Vip Selections Minimal Odds? Protipster Is A major international Area From Tipsters Where you should Bet on More than Wagering