12813 – முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு (சிறுகதைகள்).

அகரமுதல்வன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பேலஸ், பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசுக்கு அருகில், கே.கே. நகர் மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

111 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18 x 11 சமீ., ISBN: 978-93-8430-210-8.

சுந்தரலிங்கம் அகரமுதல்வன், இலங்கையின் வடபுலத்தில் பளை என்ற ஊரில் 1992இல் பிறந்தவர். இரண்டாம் லெப்டினன்ட் என்ற முன்னைய சிறுகதைத் தொகுதியையடுத்து வெளிவரும் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இதில் மரணத்தின் சுற்றிவளைப்பு, திருவளர் ஞானசம்பந்தன், சர்வ வியாபகம், கிழவி, நிலமதி, முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு, பிரேதங்கள் களைத்து அழுகின்றன, பிட்டுப் பூசை, பெய்துகொண்டிருக்கும் மழை, தேடியலையும் நள்ளிரவு ஆகிய பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் பெரும்பான்மையானவை ஈழத்தமிழர் கடந்துசென்ற போர், அழிவு, கொடுங் கொலைகள், வதை எனப் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்