12828 – போரும் மனிதனும்.

ஏ.ஏ.ஜெயராஜா. வத்தளை: எம்.எம். பப்ளிக்கேஷன்ஸ், 1026/3, ரைபிள் ரேஞ்ச் வீதி, ஹுணுப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 13 சமீ.

1986இல் எழுதப்பட்ட இந்நாவலில் ஒரு சிங்களப் போர்வீரன் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்ணொருத்தியைக் காதலித்து, அவளை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு தன் ஊருக்கு வந்து வேறொரு சிங்களப்பெண்ணை மணந்து விடுகிறான். பின்னாளில் அந்தத் தமிழ்த் தாயின் மகனும், இந்தச் சிங்களப் போர்வீரனின் மகனும் வன்னிக் காடுகளில் எதிரெதிர் நிலைகளில் நின்று போரிட்டு ஒருவரை ஒருவர் கொல்லமுயல்கின்றனர். இறுதியில் சிங்களப் போர்வீரன் தன் தமிழ்ச் சகோதரனைக் கொன்றுவிட்டு, அவனது உடலைத் தன் தந்தையின் 894.8(5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 464 நூல் தேட்டம் – தொகுதி 13 காதலியான அத்தமிழ்த்தாயிடம் ஒப்படைக்கிறான். இதுதான் கதையின் கற்பனை. இக்கதையின் துணைகொண்டு ஆசிரியர் மானிட வாழ்வின் அர்த்தங்களைத் தேட முயற்சித்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000800).

போரும் மனிதனும். அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்றுப் பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிரில்லப்பனை, 2வது பதிப்பு,செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xvi, 46 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18 x 13 சமீ., ISBN: 978-955-0700-00-4.

இந்நூலில் முதற்பதிப்பு 1994 என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செகுவேரா, அப்பா ஆகிய நாவல்களை முன்னர் வழங்கியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54051).

ஏனைய பதிவுகள்

12136 – சிவஸஹஸ்ரநாமார்ச்சனை.

ஸ்ரீ முருகேசு ஞானப்பிரகாசம் (மூலம்), சிற்றம்பலம் முருகவேள் (கருத்தும் குறிப்பும்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340,352, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 124 பக்கம்,

14833 ஈழத்தில் தமிழ்நாவல் இலக்கியம்: சில குறிப்புகள்.

ஆ.சிவநேசச்செல்வன். யாழ்ப்பாணம்: கலைப்பெருமன்ற வெளியீடு, ஏப்ரல் 1973. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கலைக்கண் இதழில் 23.4.1973 அன்று வெளிவந்த கட்டுரையின் தனி நூல்வடிவம். நூலாசிரியர்,

12455 – உடப்பு தமிழ் மகாவித்தியாலயம : நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004.

நடராஜா பத்மானந்தன் (இதழாசிரியர்). புத்தளம்: பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 103, விவேகானந்தா மேடு). xvii, 148 பக்கம், விலை: