12835 – தமிழ் ஆய்வுச் சிந்தனைகள்: மொழி-இலக்கியம்-பண்பாடு.

பொ.பூலோகசிங்கம் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 362 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22 x 14.5 சமீ., ISBN: 978-955-659-553-6.

பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தமிழியல் ஆய்வில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். இவரால் எழுதப்பட்ட 37 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கிய வரலாறு, தமிழக இலக்கிய வரலாறு, மொழியியல், சமயம், தத்துவம், பண்பாடு எனும் விடயங்களை சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் கொண்டுள்ளன. பேரா.பூலோகசிங்கம் வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்.சம்பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1961இல் முதல்வகுப்பில் சித்தியெய்தியவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக 1965இல்இணைந்து கொழும்பு, களனிப் பல்கலைக்ககழகங் களிலும் நிறைவாக, பேராதனைப் பல்கலைக்கழகத்திலே 1997இல் இணைப் பேராசிரியர் பதவியை விட்டு விலகும்வரை பணியாற்றியவர். இலங்கை அரசினால் வழங்கப்பெறும் ‘கலாகீர்த்தி’ பட்டத்தை 1993இல் பெற்றவர். இந்நூலின் பதிப்பாசிரியர் மு.கௌரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே முதுகலைமாணிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலே பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

12270 – கிராமோதய சபை கைந்நூல்.

உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு. கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, 68 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14

12182 – ஸ்ரீ நவராத்திரி நாயகியும் தோத்திர மாலையும்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, மார்கழி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xiv, 96 பக்கம், விலை:

14974 சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம்.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 208 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

12383 – கூர்மதி (மாணவர் சிறப்பு மலர்): 2005.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்), திருமதி ஜீ.தெய்வேந்திரராசா, பி.இராசையா (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 12: கிறிப்ஸ் பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 162, டாம்

14277 குடிமைச் சமூகத்தை வலுவூட்டல். A.B.M.இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 168 பக்கம், விலை: ரூபா 300.,

14140 திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேக மலர்1994.

மலர்க் குழு. திருக்கோணமலை: திருப்பணிச் சபை, வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில், 1வது பதிப்பு, ஜுலை 1994. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (23), 66 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19