12895 – பொன் அம்பலம்: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவு மலர்.

க.ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவுக்குழு, 62, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்).

(6), 148 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.

அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் (19.12.1924-22.07.1992) புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 21.8.1992 அன்று நடைபெற்ற அன்னாரின் 31ஆம் நாள் நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற நினைவு மலர் இதுவாகும். பஞ்சபுராணம், தேவாரப் பதிகங்கள், திருவாசகம், விநாயகர் அகவல், தேவி வழிபாடு, முருகன் வழிபாடு, இரண்டாம் சைவ வினா-விடை தொகுப்பு, அபிடேகப் பலன்கள், திருமுறைத் தலங்கள், திருத்தொண்டர் குருபூசை ஆகிய பக்திப்பாமாலைகளின் தொகுப்பாக இம்மலர் அமைந்துள்ளது. இதனை யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்தவரான அவரது சகோதரர் க.ஆறுமுகம் தொகுத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35627).

ஏனைய பதிவுகள்