12922 – சர்வாதிகாரி ஹிட்லரை அடிபணிய வைத்த மாவீரன் செண்பகராமன்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (வவுனியா: துஅச்சுப் பதிப்பகம்).

viii, 36 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 18.5 x 12 சமீ., ISBN: 978-955-73630-1-1.

சர்வாதிகாரி ஹிட்லரை அடிபணிய வைத்த மாவீரன் செண்பகராமனின் வரலாற்றை சிறியதொரு கைநூலாக்கித் தந்துள்ளார் சமரபாகு சீனா உதயகுமார். உலக மகா யுத்தத்தின்போது செண்பகராமன் தனது எம்டன் கப்பலின் மூலம் வழித்தாக்குதல்களை மேற்கொண்டு எதிரிகளின் கடற் கப்பல்களை மூழ்கடித்து பெரும் வீரதீரச் செயல்கள் புரிந்தவர். அக்காலத்தில் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படைகளைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்த இவர் பர்மாவில் நிலைகொண்டிருந்து ஜப்பானியருடன் இணைந்து தன் தேசிய இராணுவப் போராளிகள் மூலம் காலனித்துவ பிரித்தானியப் படையினரை நிலைகுலைய வைத்துக்கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசுக்கு வழிகாட்டியாகவும் உதவியாகவும் இருந்தவர். இவர் எவ்வாறு வரலாற்றின் ஒருகட்டத்தில் ஹிட்லரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவைத்தார் என்பதும் இச்சிறுநூலில் சுவையாக விளக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிப் படையினர் இறுதியில் நயவஞ்சகமாக செண்பகராமனுக்கு வழங்கிய உணவில் விஷமிட்டு அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஆசிரியர் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

மேலும் பார்க்க: 13000

ஏனைய பதிவுகள்

12237 – எதிர்கால உலகமும் நாமும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: Institute of Historical Studies வேதராணியார் வளவு,உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ்). xi, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. இந்நூலில் ‘நியூக்கிளியர்

14041 ஈகையின் உயர்வு.

வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: ஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர்,வேதாகம பண்டிதர், நல்லூர், 1வது பதிப்பு, 1917. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. யாழ்ப்பாணம் சைவசித்தாந்த மகா சமாசத்தின்

12207 – நித்திய கல்யாணி: இளவாலை இந்து இளைஞர் சனசமூக நிலைய பொன்விழா மலர் 1952-2002.

மலர்க்குழு. இளவாலை: இந்து இளைஞர் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ. வாழ்த்துரைகள், அறிக்கைகள்,

12111 – நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 1995.

ஏ.கே.திருச்செல்வம் (மலர் ஆசிரியர்). புத்தளம்: ஆலய பரிபாலன சபை, நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில், மாம்புரி, 1வது பதிப்பு, ஜுன் 1995. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்). (164) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: