12948 – இலங்கை முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள்.

நீர்வை பொன்னையன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இல.18/6/1, கொலிங்வுட் பிளேஸ், 2வது பதிப்பு, ஜனவரி 2017, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

xxiv, 327 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20 x 14 சமீ., ISBN: 978-955-

இப்பாரிய தொகுப்பில் எம்மிடையே வாழ்ந்தவர்களும், வாழ்ந்து வருபவர்களுமாக மொத்தம் 40 ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களை இனம்கண்டு அவர்கள் பற்றிப்பிற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நீர்வை பொன்னையன். சி.வி.வேலுப்பிள்ளை 1914-1984 (லெனின் மதிவானம்), கே.கணேஷ் 1920-2004 (லெனின் மதிவானம்), அ.ந.கந்தசாமி 1924-1968 (ஏ.இக்பால்), கே.டானியல் 1925-1986 (சி.மௌனகுரு), கவிஞர் பசுபதி 1925-1965 (ந.ரவீந்திரன்), அகஸ்தியர் 1926-1995 (லெ.முருகபூபதி), சுபைர் இளங்கீரன் 1927- 1997 (செ.யோகராசா), பிரேம்ஜி ஞானசுந்தரம் 1930-2014 (லெனின் மதிவானம்), காவலூர் இராஜதுரை 1931-2014 (லெ.முருகபூபதி), எச்.எம்.பி.முஹிதீன் 1932-1988 (நீர்வை பொன்னையன்), கா.சிவத்தம்பி 1932-2011 (சபா ஜெயராசா), முகம்மது சமீம் 1933-1988 (லெனின் மதிவானம்), க.கைலாசபதி 1933-1982 (சபா ஜெயராசா), நா.சோமகாந்தன் 1933-2006 (வசந்தி தயாபரன்), சில்லையூர் செல்வராசன் 1933- 1995 (எம்.ஏ.நு‡மான்), சுபத்திரன் தங்கவடிவேல் 1935-1979 (சித்திரலேகா மௌனகுரு), கவிஞர் முருகையன் 1935-2009 (ந.ரவீந்திரன்), ப.ஆப்டீன் 1937-2015 (திக்குவல்லை கமால்), யோ.பெனடிக்ட் பாலன் 1939-1997 (செ.யோகராசா), இ.சிவானந்தன் 1941-1995 (செ.யோகராசா), செ.யோகநாதன் 1941-2008 (ஐ. சாந்தன்), கே.விஜயன் 1943-2016 (லெனின் மதிவானம்), சாருமதி க.யோகநாதன் 1947-1998 (சி.மௌனகுரு), ராஜஸ்ரீகாந்தன் 1948-2004 (திக்குவல்லை கமால்), செ.கணேசலிங்கன் 1928- (சபா.ஜெயராசா), டொமினிக் ஜீவா 1927- (எம்.எஸ். தேவகௌரி), என்.கே.ரகுநாதன் 1929- (எம்.கே.முருகானந்தன்), நீர்வை பொன்னையன் 1930- (சபா ஜெயராசா), சி.தில்லைநாதன் 1937- (வ.மகேஸ்வரன்), ஏ.இக்பால் 1938- (தர்காநகர் ஸபா), சபா ஜெயராசா 1940- (வ.மகேஸ்வரன்), தெணியான் 1942- (வசந்தி தயாபரன்), மருதூர்க்கனி 1942- (ஏ.இக்பால்), செ.கதிர்காமநாதன் 1942- (எம்.கே.முருகானந்தன்), மு.கனகராசன் 1942- (திக்குவல்லை கமால்), சி.மௌனகுரு 1943- (எம்.ஏ.நு‡மான்), எம்.ஏ.நு‡மான் 1944- (வ.மகேஸ்வரன்), ஐ.சாந்தன் 1947- (எம்.எஸ்.தேவகௌரி), திக்குவல்லை கமால் 1950- (ந..ரவீந்திரன்), லெ.முருகபூபதி 1951- (வசந்தி தயாபரன்) ஆகிய எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிய தகவல்கள் இக்கட்டுரைகளில் காணமுடிகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61508).

ஏனைய பதிவுகள்