12959 – ஸ்ரீமான் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்.

வு.யு.ராஜரத்தினம். சென்னை: வு.யு.ராஜரத்தினம், 1வது பதிப்பு, மே 1934. (அச்சக விபரம் தரப்படவில்லை),

viii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17 x 12 சமீ.

சி. வை. தாமோதரம்பிள்ளை (சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை C.W. Thamotharampillai, 12.09.1832-01.01.1901) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த தமிழறிஞர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனவும் தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் எனவும் விரும்பித் தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான இவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை இந்நூல் பதிவுசெய்கின்றது. ஈழச்சிறப்பு-ஆரம்ப உரை, பிள்ளை அவர்களின் ஜனனம், இல்வாழ்க்கைச் சிறப்பு, பிள்ளையவர்கள் ஏற்ற கடமை, தொல்காப்பியம், வீரசோழியமும் தணிகைப் புராணமும், தொல்காப்பியம் பொருளதிகாரம், கலித்தொகை, பிள்ளையவர்கள் நீதியதிபரானது, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், குடும்ப விஷ யங்கள், அரசினர் மதிப்பு, அகநானூறு, வசன சூளாமணி, பிள்ளையவர்களின் பிற்காலமும் மரணமும், முடிப்புரை ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. மேலும், பக்கம் 96 முதல் 112 வரை சி.வை.தா அவர்கள் இறந்தபோது பல்வேறு வித்துவான்களும் இயற்றிப்பாடிய சரமகவிகள் தொகுக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் கும்பகோணம் இராஜாங்க கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் பிள்ளையவர்களின் நண்பருமான உ.வே.சாமிநாத ஐயரவர்கள், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, அ.குமாரசுவாமிப் புலவர், நா.கதிரவேற்பிள்ளை, சி.வை.சின்னப்பாபிள்ளை (சி.வை.தா. வின் சகோதரரும் அவரது மாணாக்கரும்), சி.தா.அழகசுந்தரம் ஆகியோரின் சரமகவிகள் இந்நூலின் பின்னிணைப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 14119. நூலின் முற்பகுதி எஸ்.காராளசிங்கம் அவர்களினால் மார்ச் 1993இல் எழுதி வெளியிடப்பட்ட Life of Rau Bahadur C.W.Thamotharampillai என்ற நூலும் இடம்பெற்றுள்ளது). மேலும் பார்க்க: 12011.

ஏனைய பதிவுகள்

12122 – அருணகிரிநாத சுவாமிகளும் கதிர்காமத் திருப்புகழும்.

பண்டித நடராஜபிள்ளை. யாழ்ப்பாணம்: பண்டித நடராஜபிள்ளை, நீர்வேலி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). viii, 84 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12

14132 சுழிபுரம்-பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

04.04.2004. பால. கோபாலகிருஷ்ண சர்மா (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: வாக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). iii, 92 பக்கம்,

14237 வாழைச்சேனைப்பிரதேசத்து திருத்தல பஜனைப் பாடல்கள்.

பெ.புண்ணியமூர்த்தி. வாழைச்சேனை: சிவநெறிப் புரவலர் வெளியீடு, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126ஃ1, திருமலை வீதி). எii, 25 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 22×16

14467 சித்த மருத்துவம் 1985.

எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி.விமலதாஸ் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 40 + (28) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14618 தேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு.

ராஜகவி ராஹில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00,

14427 தமிழ் அகராதியியலின் பரிணாமம் மற்றும் பரிமாணம்: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு-ஆய்வரங்க மலர் (முதலாம் பாகம்).

சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம்