அன்ரன் பாலசிங்கம். சென்னை 600004: கானல் வெளியீடு, 1வது பதிப்பு, 2014. (சென்னை: கிளாசிக் பிரின்டர்ஸ்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5 x 13.5 சமீ.
1990களின் முற்பகுதிகளில் கருணாகரனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டுவந்த ‘வெளிச்சம்’ சஞ்சிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பிரம்மஞானி என்ற புனைபெயரில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. எம்.ஜி.ஆரும் புலிகளும், ராஜீவ்-பிரபா சந்திப்பு, மனிதனைத் தேடும் மனிதன், கருத்துலகமும் வாழ்வியக்கமும், மனப்புரட்சியும் மனித விடுதலையும்-ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, உலக வரலாறும் மனித விடுதலையும், பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி, அதிகாரத்தின் அரூபக் கரங்கள், தனி மனித தத்துவம், அர்த்தமும் அபத்தமும், மனிதத்துவம்-சாத்தர் பற்றிய ஒரு அறிமுகம் ஆகிய பதினொரு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.