12995 – இலங்கையில் ஒரு வாரம்.

கல்கி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணமூர்த்தி). சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 1956, 1வது பதிப்பு, ஜனவரி 1954. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை).

96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5 சமீ.

பத்து அத்தியாயங்களில் தனது ஒரு வாரகால இலங்கைப் பயணத்தை சுவைமிக்க தனது எழுத்தாளுமையுடன், அங்கதச் சுவை கலந்து இப்பயணக் கதையில் விபரித்திருக்கிறார். ‘மரகதத் தீவு’ என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்குப் பயணம் செய்து, தன் அனுபவங்களை ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் 05.06.1938 முதல் 02.10.1938 வரை சுவைபட எழுதியிருந்தார். தான் சென்றுவந்த ஈழத்தின் தமிழ்ப் பிரதேச மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள், தான் சந்தித்த தமிழ் அறிஞர்கள் என விரிவாகத் தன் மனவுணர்வுகளைப் பதிவுசெய்திருக்கிறார். அந்தத் தொடரின் நூல்வடிவம் இது. கல்கி அவர்கள் 09.09.1899-அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பப் பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய வேளையில் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் ‘நவசக்தி’ என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ‘ஏட்டிக்குப் போட்டி’ 1927-ல் வெளியானது. மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினம் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் இவர் பங்களித்திருக்கிறார். ‘தியாகபூமி’ நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19442. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004265).

ஏனைய பதிவுகள்

14136 தாய்மையின் பொலிவு தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 150ஆவது ஜனன ஆண்டு விழாச் சிறப்பு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 06: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமிதி, 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). (4),

14285 சர்வதேச மனித உரிமைகள் பற்றிய சட்டங்களும் சட்ட அபிவிருத்தியும். வை.விவேகானந்தன்.

களுவாஞ்சிக்குடி: ம.சிவநேசம், சிவாபவனம், சிவன்கோவிலவீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xx, 347 பக்கம், விலை: ரூபா 600.00, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் மனித உரிமைகளின்

14051 வெசாக் சித்திவிலி 1991.

ரஞ்சித் சமரநாயக்க (பிரதம ஆசிரியர்). பத்தரமுல்ல: ஐக்கிய பௌத்த மத்திய சபை, செத்சிரிபாய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே, 1வது பதிப்பு, வைகாசி 1991. (கொழும்பு 7: முனிசிப்பல் அச்சகம்). (26), 140 பக்கம், புகைப்படங்கள்,

14399 கிராமிய வழிபாடு.

மு.மனோகரன். கொழும்பு 6: மு.மனோகரன், வானதி வெளியீடு, 100/16, றொபேட் குணவர்த்தன மாவத்தை, கிரிலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை). vi,

12977 – விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும்.

கரிகாலன் (தொகுப்பாசிரியர்), கு.பூபதி (பதிப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 375 பக்கம், விலை:

12409 – சிந்தனை (தொகுதிVIII, இதழ் 1,3).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி). (8), 105 பக்கம், விலை: