திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).
40 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.
ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம் சைவர்களிடையே முக்கியமானது. தமிழில் முருகனைத் துதித்து இகபரசுகம் அடையவும் எண்ணிலா விடயங்கள் அடங்கியதான அரும்பெரும் பொக்கிஷமாக கந்தப்பெருமான் மேற் பாடப்பெற்ற பாடல்களுள் ஒன்றான கந்தசஷ்டி கவசத்தை முன்நிறுத்தி, முருகன் ஆறுபடைகளின் பெருமைகளையும் விதந்துரைக்கும் வண்ணம்ஆறு கவசங்களையும் அதன் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் வகையில் கந்தசஷ்டி கவசம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு எழுதப்பட்டுள்ளது.