13423 வருகையின் தூதன் சிறப்புமலர்-1988.

செ.யோ.செல்வராசா (மலராசிரியர்). மட்டக்களப்பு: கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமம், கிரான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(22) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தின் 31வது வருடாந்த விழா 09.09.1988இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கிரான் பெரியண்ணன் கலையரங்கத்தினர் மேடையேற்றிய வருகையின் தூதன்(வடமோடி நாட்டுக்கூத்து) கூத்தும் மேடையேற்றப்பட்டது. கிறிஸ்தவ நற்செய்திகளை பாமர மக்களுக்குப் புகட்டும் வகையில் எழுதப்பட்ட நாட்டுக்கூத்தான ‘வருகையின் தூதன்’ , முற்தூதர் யோவானின் சரித்திரத்தை வடமோடிக் கூத்து மரபில் இங்கே மேடையேற்றியுள்ளனர். இவ்விரு நிகழ்வுகளையும் நினைவுகூரும் வகையில் இச்சிறப்புமலர் வெளிவந்துள்ளது. இம்மலரில் ஈழத்து நாட்டக்கூத்து மரபு: ஒரு தேர்ந்த நூல்விபரப்பட்டியல் (என.செல்வராஜா), வருகையின் தூதன் நாட்டுக்கூத்தின் கதை வடிவம், மேடையேற்றத்திற்குப் பொறுப்பாகவிருந்த கலைஞர்களின் விபரம், கத்தோலிக்க சமயமும் ஈழத்து நாட்டுக்கூத்து மரபும் (இ.பாலசுந்தரம்), எமது நாடக மரபு (சி.மௌனகுரு) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

9254 இலங்கைப் பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள்: பாகம் 1: கி.பி.1500 ஆண்டுகள் வரை.

செல்லையா கிருஷ்ணராஜா. யாழ்ப்பாணம்: பிறைநிலா வெளியீடு, 2ஆம் கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, புரட்டாதி 2012.(கொழும்பு 6: AB Creator and Publishers, 8A-4/2, புகையிரத நிலைய வீதி, வெள்ளவத்தை).