கதிரவன் த.இன்பராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45A, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
114 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
2017 செப்டெம்பர் 3 முதல் 4 வரை மட்/ககு/கிரான் மத்திய கல்லூரி மண்டபத்தில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2017க்கான ஆண்டு மலர் இது. அமைப்பினரின் பல்வேறு அறிக்கைகளுடன், உரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் அறிமுக உரைகள், ஆய்வுரைகள், ஆய்வு மதிப்பீட்டுரைகள் என்பவற்றையும் உள்ளடக்கியதாக இம்மலர் வெளிவந்துள்ளது. ஆய்வுரைகளாக திரு.த.மேகராசா அவர்களின் ‘வெடியரசன்’, திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களின் ‘வீரநாரணன்’, திரு.கோ.குகன் அவர்களின் ‘மீகாமன்’, செல்வி க.தங்கேஸ்வரி அவர்களின் ‘விளங்குதேவன்’ ஆகிய ஆய்வுகளும் அவற்றிற்கான மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.