13668 இருளில் ஒரு விம்பம்.

கூடலூர் சிந்துஷன் (இயற்பெயர்: இராசேந்திரம் சிந்துஷன்). வேலணை: தாய்சக்தி கலைக்கூடம், புளியங்கூடல், 1வது பதிப்பு, ஐப்பசி 2018. (யாழ்ப்பாணம்: தீபம் பிரிண்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி).

(14), 71 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-71411-0-7.

கூடலூர் சிந்துஷனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. யா/வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்ற இவர், இளம் வயது முதலே தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டவர். இவரது கவிதைகளில் சில சமூக நலனை அவாவி நிற்கின்றன. பெரும்பாலானவை காதல் கவிதைகளே. அந்தி சாயும் பொழுது என்ற முதலாவது கவிதையிலிருந்து  உன்னில் என்னைத் தொலைத்தேன் என்ற இறுதிக் கவிதை ஈறாக ஐம்பது கவிதைகளை இத்தொகுப்பில் இணைத்திருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

13913 சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் செந்தமிழ்ப் பணி: ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.

சிவ.சண்முகவடிவேல் (பதிப்பாசிரியர்). ஏழாலை: அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தான சபை, 1வது பதிப்பு, 2012. (ஏழாலை: ஏ.மு.து. அச்சகம், ஏழாலை மேற்கு). (18), 186 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. இராவ்பகதூர்