விழிமைந்தன் (மகேந்திரன் பிரவீணன்). தெல்லிப்பழை: தேற்றம் வெளியீடு, விழிசிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (இணுவில்: அம்மா பதிப்பகம்).
xix, 149 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ.
கவிஞர் விழிமைந்தனின் பாறையும் நதியும், இவளா அவளா?, இக்கரையும் அக்கரையும், அம்மன் சிலை, வலியும் எலியும், வயலும் காற்றும், உண்ணீர், நம்பிக்கை, காலம், காரிருள் எது?, பாலைவனப் பயணி, அடிமை, தேசத்(தின்) துரோகம், நாயிற்கடையாய்க் கிடந்து, ஆசான், காலங்கள், சதுரங்கம், அகதி, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அன்பின் நிறம், நாடும் காடும் அல்லது தாம்பத்தியம், முக்கால் பங்கும் முட்டாள் மந்தையும், முச்சந்தி நாய், பெறுமதி, மீளா அடிமை, முகப்புத்தகமும் முகங்களும், ஆண்மை, யமஹா ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் வடிக்கப்பட்டுள்ளன.