13723 நானே குற்றவாளி: ஐந்து அங்கமுள்ள நாடகம்.

சுவாமி எல்.டெசி. நெடுந்தீவு: சுவாமி எல்.டெசி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1946. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).

(6), 123 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

வண. எல்.டெசி சுவாமியாரினால் ஐந்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நாடகம் கிறிஸ்தவ இறையியல் கருத்துக்களை புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கத்தோலிக்கர்களினால்; நம்பிக்கையுடன் பார்க்கப்படும் பாவசங்கீர்த்தனம் பற்றிய நாடகம் இது. பாவசங்கீர்த்தனம் கொடுக்கும் குருவானவரிடம் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவது இந்நாடகத்தின் நோக்கமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 01903).

ஏனைய பதிவுகள்

11371 ஆன்மீக மங்கலம் அறுபது.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய்வீதி). 90 பக்கம், விலை: