13755 தடம் மாறும் பாதைகள்.

சி.இராஜினிதேவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

viii, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-58-9.

தடம் மாறும் பாதைகள் தொகுப்பின் கதைகள் அனைத்திலும் காணக்கிடைக்கின்ற பொதுப் பண்புகள், படைப்பாளியின் சமூக அக்கறை, மனித நேயம், சமூகச் சிறுமைகளுக்கு எதிரான அவரது கோபம் ஆகியன என்று கூறலாம். அதே பொழுதில் கண்டிக்கப்படவேண்டியதும் இழிவென ஒதுக்கப்படவேண்டியதுமான விடயங்களைச் சொல்லவரும் இடங்களில் அவரது தொனி எச்சரிக்கையுடன் பௌவியமாகவே வெளிப்படுத்தப்படுகின்றது. இத்தொகுதியில் இராஜினிதேவி எழுதிய காகிதப்பூக்கள், எதிர்பார்த்தவையும் எதிர்பாராதவையும், பாரிஜாதம், விடியலைத் தேடும் வெண்புறா, பசி, பெற்ற மனம் பித்து, சலனம், மொட்டுக்களும் முட்களும், விடிவு, தடம் மாறும் பாதைகள், ஊசலாடும் உறவுகள், உயர்ந்த உள்ளம் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 24895). 

ஏனைய பதிவுகள்

14234 முருகன்கீர்த்தனைகள்: ஆறுமுக வேலவன் துதி. பாமதி மயூரநாதன்.

யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). vii, 24 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு:

12846 – புலவர்மணி கட்டுரைகள்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை (மூலம்), பெ.விஜயரெத்தினம், இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 1998. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12) 159 பக்கம், விலை: ரூபா

11872 வேரும் விழுதும்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 160 பக்கம், விலை: ரூபா