13820 தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா ஆய்வரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு 2013.

வண.பிதா ஞா.பிலேந்திரன், கி.விசாகரூபன், தி.வேல்நம்பி (பதிப்பாசிரியர் குழு).     யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாண மறை மாவட்டம், 1வது பதிப்பு, ஆடி 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xii, 249 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-51423-4-2.

27,28 ஆடித்திங்கள் 2013 அன்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்டம் இணைந்து நடத்திய தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா நிகழ்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மட்டக்களப்புத் தமிழ் நாட்டார் கதைகளில் அறம்-ஓர் அமைப்பியல் ஆய்வு (கோபாலப்பிள்ளை குகன்), சமகாலக் கவிதைகளில் அகவயம்: ஒரு மனமுதல்வாத வாசிப்பு (ந.மயூரரூபன்), தமிழியல் ஆய்வு வரலாற்றில் ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை (மா.ரூபவதனன்), அறிவியல் தமிழ் வளர்ச்சி: கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அணுகுமுறைகள் (மா.சின்னத்தம்பி), தமிழ்மொழி தமிழிலக்கிய வளர்ச்சியில் 19ஆம் நூற்றாண்டுக் கிறீஸ்தவப் பத்திரிகைகள் (சி.பத்மராஜா), தமிழ்-செம்மொழி நியமங்களும் அதனைத் தக்கவைத்தலின் நடைமுறைகளும், சவால்களும் (நவதீசன் உதயலதா), மணிமேகலை குறிப்பிடும் பௌத்த தத்துவம் (இ.சகாயசீலன்), பின்னைப் போர்ச் சிறுகதைகள்: கருணைரவியின் ’கடவுளின் மரணம்’ தொகுதியை முன்வைத்து ஓர் ஆய்வு (வதனரேகா அஜந்தகுமார்), அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நாவல் -ஓர் ஆய்வு (சு.குணேஸ்வரன்), யாழ்ப்பாண இந்து சமய செல்நெறியில் இளைஞர்களின் பங்கும் பணியும் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), இடைநிலைப் பிரிவு வகுப்புகளில் தமிழ் இலக்கணம் கற்றல், கற்பித்தலில் எதிர்நோக்கும் சவால்கள் (பா.சோபா), திரைப்படங்கள் சித்திரிக்கும் குறவர் வாழ்வியல்: அளிக்கம்பை வனக்குறவர் சமூகத்தை மையமாகக் கொண்டது (ச.தயாகாந்தன்), தொன்மை மிக்க தமிழர் பண்பாட்டைப் பேணும் மட்டக்களப்பு (கௌரி புண்ணியமூர்த்தி), ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் (சி.ரமேஷ்), இலங்கைப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள்: ‘பாலை நண்டுகள்’ தொகுதியை முன்வைத்த ஓர் ஆய்வு (த.அஜந்தகுமார்), இந்துக்களது வழ்வியலில் அறம் (விக்கினேஸ்வரி பவநேசன்), மலையகத் தமிழ் நாவல்களின் அண்மைக்காலப் போக்குகள் (எஸ்.வை.ஸ்ரீதர்), மட்டக்களப்பு மேற்கு வலய மக்களின் வாழ்வியலுடன் இணைந்த பண்பாட்டு அம்சங்கள்: ஏறாவூர் பற்று பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (பொன்னுத்துரை நிலாந்தினி), சதகங்கள் புலப்படுத்தும் அறச்சிந்தனைகள் (ஜனகா சிவசுப்பிரமணியம்), தமிழிலக்கியத்தில் சமயம் கடந்த ஆன்மீகம் (ஜெயசேகரம்), ஆரம்பப் பிரிவு மாணவர்களின் தமிழ்மொழி வாசிப்புத்திறனும் சவால்களும் (க.கேதீஸ்வரன்), தமிழ்க் குறுங்காவியங்கள் வரிசையில் ‘தகனம்’-ஓர் ஆய்வு நோக்கு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), அர்ச். யாகப்பர் அம்மானை-ஈழத்தில் போர்த்துக்கேயர் கால கிறிஸ்தவ இலக்கியப் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு (ஹறோசனா யேசுதாசன்), தமிழர் பண்பாட்டின் தொன்மையில் சம்ஸ்கிருத மொழியின் செல்வாக்கு-மொழிபெயர்ப்பியலூடான பார்வை (ச.பத்மநாதன்), Tamil among the languages of E-Governance in India (தர்மினி நரேந்திரநாதன்), Nattiyak Kalai: Fr. Thaninayagam’s Perspective (வண.என்.மரிய சேவியர்) ஆகிய 26 ஆய்வுக்கட்டுரைகள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14 Nederland Bank Vestigingen Met Openingstijd

Inhoud Nederlanders Zullen Spelen Te Betrouwbare Online Casino’s Discover Nederland Casinowith Your Try Out Experience Which Dutch Gokhal Site Has Thesis Lieve Verzekeringspremie Offer? Nederlandse