சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்), சுபாசினி கிருபாகரன் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு: உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, எட்டாம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கலாச்சார நிதியம், 212/1 பௌத்தலோக மாவத்தை).
xiv, 168 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9117-43-8.
கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்களான, சுபாசினி கேசவன், சுபாசினி கிருபாகரன் ஆகியோரை பதிப்பாசிரியர்களாகக்கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் வெளிப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்திவரும் போட்டித் தொடரில் 2018ஆம் ஆண்டுக்கான போட்டியில் பரிசுபெற்ற கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதே திட்டத்தின்கீழ் சிங்கள மொழியிலும் பிரபாஸ்வர என்ற பெயரிலும் கடந்த சில ஆண்டுகளாக நூல்தொடர் ஒன்று வெளியாகியுள்ளது. 8 பாடல்களும், 8 சிறுகதைகளும், 8 கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர் கதை ஆக்கத்தில் வெற்றிபெற்றோர் விபரமும், சித்திர ஆக்கத்தில் வெற்றிபெற்றோர் விபரமும் குறுநாடகப் போட்டியில் பங்கேற்றோர் விபரமும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.