ரவிக்குமார் (ஆசிரியர்), தேன்மொழி (துணை ஆசிரியர்). தஞ்சாவூர் 613004: மணற்கேணி, 79, மருத்துவக் கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக் கல்லூரி சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (தமிழ்நாடு: அகரம் அச்சகம், தஞ்சாவூர்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 24.5×18.5 சமீ., ISSN: 2249-9164.
முனைவர் ரவிக்குமார், முனைவர் தேன்மொழி ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ‘மணற்கேணி’ ஆய்விதழ் தமிழகத்தில் வெளிவருகின்றது. 41ஆவது இதழில் கே.பழனிவேலு, தொல் திருமாவளவன், ரவிக்குமார், தேன்மொழி, ச.கிருஷ்ணசாமி, டேவிட் அர்னால்ட் ஆகியோருடைய கட்டுரைகளுடன், ஈழத்தவரான மணி வேலுப்பிள்ளை அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட டி.விக்னேசன் அவர்களது ’மியரி ஜேம்ஸ் தம்பிமுத்து- 1915-1983: கவிஞர்களுள் ஓர் இளவரசன்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.