14063 கடவுள் ; வழிபாடும் தமிழ் மக்களும்.

ஆ.விஸ்வலிங்கம். கொழும்பு: டாக்டர் ஆ.விஸ்வலிங்கம், 26, உவார்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1975. (சென்னை-01: Hoe and Co.,The Premier Press).. 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அறமே மூலாதாரமாகக் கொண்டு வருவித்த மனித வாழ்வை விளக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை. கடவுளைப் பற்றிய தௌ;ளிய அறிவையும் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தையும், பாசத்தின் திறமையையும், ஜீவகாருண்யத்தின் மகிமையையும் தெய்வத்தின் கருணை கலந்த நீதிமயமான பூமிகளையும் குறித்து, சைவசமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மீறி வேறு எந்த மதத்திலும் இத்துணை அழகாயும் தெளிவாயும் எடுத்துக்காட்டப்படவில்லை என்று உறுதிபடக்கூறும் இக்கட்டுரை பாளையங்கோட்டை சைவ சபை மகாசங்கச் சொற்பொழிவாளர்களான திருவாளர்கள் தில்லைநாயக முதலியார், ரி.பக்தவத்சலம், ரி.செல்வகேசவ முதலியார், பண்டிதை அகலாம்பிகை அம்மாள் ஆகியோரின் உரைகளினின்றும் எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24541).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

12255 – தொழிற்சங்க நூற்றாண்டு: 1893-1993.

இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம். கொழும்பு: இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம், இல. 7, சேர்க்குலர் வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, 1995. (களனி: வித்யாலங்கார அச்சகம்). x, 181 பக்கம், விலை:

14663 வேர்கள்: கவிதைத் தொகுதி.

தி.வேல்நம்பி. யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). 56 பக்கம், விலை: ரூபா 18.00, இந்திய ரூபா 12.00,