14125 கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர்.

மலர்க் குழு. கொழும்பு: தர்மகர்த்தா சபை, புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 85 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ. 09.02.1992 அன்றுவெளியிடப்பெற்றிருந்த இச்சிறப்பு மலரில் வாழ்த்துரை, ஆசியுரைகளுடன், கோயில் வரலாற்றுச் சிறப்பு (ஆலய தோற்றம், திரு.ஆர்.எம். பழனியப்பா செட்டியாரும், தருமகர்த்தா சபையும்), கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய விநாயகர், கதிர் வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.ஆர்.எம்.பழனியப்ப செட்டியாருடன் ஒரு சந்திப்பு – சந்திப்பவர்: க.கனகலிங்கம், கும்பாபிஷேகக் காட்சிகள், சிந்தனைச் சிற்பி கட்டடக் கலைஞர் திரு.வி.எஸ். துரைராஜாவின் இதயம் பேசுகிறது, கும்பாபிஷேகமும் மண்டலாபிஷேகமும் (சி.அகிலேஸ்வரி), கொழும்பு நகர் ஆடி வேல் விழா வரலாறும் விழாக் கோவில்களும் (சி.சிவபாதசுந்தரம்), விநாயகர் தத்துவம் (திருமதி வி.சி.சர்மா), ஆலய வழிபாட்டில் செய்வனவும் செய்யத்தகாதனவும் (மானியூர் சி.குமாரசாமி), இறைவனின் உறைவிடங்கள் (பா.சி.சர்மா), The Role of Nattukottai chettiars in Sri lanka. (ஆ.தேவராஜன்), விநாயகரின் திருவடிவங்களில் சில ஆகிய படைப் பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57157).

ஏனைய பதிவுகள்

14183 இல்லைத் துன்பமே: மூவர் அருளிய திருவைந்தெழுத்துப்பதிகங்கள்.

சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11

12014 – ஈழநாதம்: 1வது ஆண்டு மலர்.

பொ.ஜெயராஜ் (ஆசிரியர்), செ.இளங்கோ (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ. 19.2.1990 அன்று