14196 சிற்றம்பலநாடிகள் அருளிய திருச்செந்தூரகவல் மூலமும் விளக்கவுரையும்.

சிற்றம்பல நாடிகள் (மூலம்), பொன்.அ.கனகசபை (விளக்கவுரை). புங்குடுதீவு 3: ச.தம்பையா, புங்குடுதீவு சிவதொண்டர் வெளியீடு, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430,காங்கேசன்துறை வீதி). xviii, 169 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: ‘திருமுருகன் குருமூர்த்தியாய் எழுந்தருளி, திருவருள் செய்யப்பெற்ற பெரும்பேறு படைத்தவர்களுள் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஒருவர். மெய்கண்ட சந்தான சீட பரம்பரையில் உள்ளவர் இந்தச் சிற்றம்பல நாடிகள். இவர் திருச்செந்தூர்த் திருமுருகன் சந்நிதியில் தவமிருந்து, இளமையும் அழகும் ஒழுகி வழியும் திருமுருகன் திருவுருவை நேரில் தரிசித்த காட்சிகளையும், திருமுருக குருமூர்த்தி, தீட்சைசெய்து, உபதேசித்தவைகளையும், செய்யுள் வடிவில், சுப்பிரமணியர் அகவல் என்ற பெயரில் உபகரித்தருளி தாம் பெற்ற அருள்வளத்தை, பெறவிரும்பியோரையும், பெறுதற்கு ஆற்றுப்படையும் அருளியிருக்கிறார். அகவல் அடிப்படையிலிருந்து சுத்தாத்துவித முத்திவரை, சைவசித்தாந்த உண்மையை எடுத்துக்காட்டுவதாயும் அமைந்திருக்கின்றது. இந்த அருண்ஞான பொக்கிஷம் நித்திய பாராயணத்துக்கும் சமய சிந்தனைக்கும் கிடைத்ததொரு தேவாமிர்தம். சுப்பிரமணியர் அகவலைப் பன்னிரு வருடம் பாராயணம் செய்து, அதற்கு ஒரு நல்ல தெளிவான விளக்கவுரை செய்திருக்கின்றார் வித்துவான் திரு. பொன். அ.கனகசபை அவர்கள். வித்துவான் அவர்களின் மனத்தூய்மையும் ஆழமான சமய சிந்தனையும், விரிந்து பரந்த நூலாராய்ச்சியும் பிரசித்தமானவை. உரையில் எடுத்தாண்ட பிரமாண நூல்களின் அட்டவணை அநுபந்தமாய் வருவது நன்று”. (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, அணிந்துரையில்). (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

12172 – முருகன் பாடல்: ஆறாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

14530 அன்பான சிறுவர்களே: குழந்தைக் கதைகள்.

செ.யோகநாதன். கொழும்பு 11: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 11: எம்.டி.குணசேனா அன் கொம்பெனி). (6), 42 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00,

14571 இப்படியும் (தேர்ந்த கவிதைகள்).

அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: அழ.பகீரதன், தேசிய கலை இலக்கியப் பேரவை, செருக்கற்புலம், சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 98 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு:

14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள்,