14202 தமிழ் வேதப்பாமாலை.

அருள் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, மார்ச் 1995. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. திருஞான சம்பந்த நாயனார் தேவாரம், திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினோராந் திருமுறை, பன்னிரண்டாந் திருமுறை, திருப்புகழ், வாழ்த்து, விநாயகரகவல்-ஒளவையார், சிவபுராணம்-மாணிக்கவாசக சுவாமிகள், ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்தோத்திரம், துக்க நிவாரண அஷ்டகம், கந்தசஷ்டி கவசம்-பாலன் தேவராயர், பெருமாள் திருமொழி, சரஸ்வதி தோத்திரம், இலக்குமி தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகிய பக்தி இலக்கியங்களின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் பிரார்த்தனைகளில் பாடுவதற்கேற்ப பிரசுரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17274).

ஏனைய பதிவுகள்