திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). v, 170 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ. இந்நூலில் விநாயகர் பாடல்கள், பன்னிரு திருமுறைகள், சிவன் பாடல்கள், அம்மன் பாடல்கள், நாராயணர் பாடல்கள், முருகன் பாடல்கள், ஐயப்பன் பாடல்கள், ஆஞ்சநேயர் பாடல்கள் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் சைவத் தமிழ் பக்தி இலக்கியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் சுழிபுரம் யாழ்ஃ விக்டோரியாக் கல்லூரியின் ஆசிரியராவார்.
10954 ஒரு கூர்வாளின் நிழலில் (இலங்கைப் பதிப்பு): நினைவுக் குறிப்புகள்.
தமிழினி ஜெயக்குமரன். கிளிநொச்சி: சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம், இல.168, ஆனந்த நகர், 1வது பதிப்பு, 2015. (மஹரகம: கலர் வேவ் பிரைவேட் லிமிட்டெட், 92B, பமுனுவ வீதி). 268 பக்கம், 8 தகடுகள், புகைப்படங்கள்,