பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). ஒஎi, 60 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ. முருகன் திருவருள் பற்றிக் கூறும் இந்நூலில் கச்சியப்பசிவாச்சாரியார் அருளிச்செய்த கந்தபுராணத்தின் சில பகுதிகள் இலக்கிய நயத்துடன் இன்றைய இளைஞருக்கு ஆன்மீக போதனையளிக்குமுகமாக எழுதி வழங்கப்பட்டுள்ளது. புராணபடன ஆசிரியரான தனது தந்தையாரின் கந்தபுராண படன உரைகளை சிறுவயது முதலே கேட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பக்திசிரத்தையுடன் கூடிய நல்மனத்துடன் திருமதி பாமதி மயூரநாதன் இச்சிறு நூலை எழுதியுள்ளார்.
14229 மங்களேஸ்வரக் குருமணி.
சி.குஞ்சிதபாதக் குருக்கள். கொழும்பு: சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள், பிரதம சிவாசாரியார், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14