14244 ஏன் தொழ வேண்டும்?.

ஹஸனுல் பன்னா(ரஹ்), மௌலானா மௌதூதி. கொழும்பு 9: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி வெளியீடு, 204/1, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1973. (கொழும்பு 10: டயமண்ட் அச்சகம், 98, டீன்ஸ் ரோட், மருதானை). 64 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×13 சமீ. இஸ்லாமியர்கள் ஏன் தொழுகை செய்யவேண்டும் என்பதை விளக்கும் சிறு நூல். தொழுகை ஒரு விளக்கம், ஜமாஅத் தொழுகை, தொழுகை பயன்தர வேண்டுமானால், தொழுகையின் மொழி ஆகிய நான்கு கட்டுரைகளின் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது இடம்பெற்றுள்ள கட்டுரை மத்திய கிழக்கின் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களுடையது. ஏனைய கட்டுரைகளின் ஆசிரியர் இஸ்லாமிய அறிஞர் மௌலானா ஸெய்யித் அபுல் அஃலா மௌதூதி என்பவராவார்.

ஏனைய பதிவுகள்

17225 சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்: தந்தை செல்வாவை நன்றியுடன் நினைவுகூரல்.

ரவூப் ஹக்கீம். கொழும்பு: ரவூப் ஹக்கீம், பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 20.5×14.5 சமீ. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

15912 ஒரு கனவின் மீதி: ரவீந்திரம்.

பால.சுகுமார் (மலர் தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 100 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5