14247 கலைபடும் மௌனம். . A.B.M .இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×10.5 சமீ., ISDN: 978-955-0697-06-9. திருக்கோணமலையில் சந்திப்பொன்றை 2010 ஒக்டோபர் 2-3ஆம் திகதிகளில் A.B.M மீடியா ஒழுங்குசெய்திருந்தது, அதில் A.B.M. இத்ரீஸ், கலகம், இல்மா அமைப்புகளின் நண்பர்களுடனும் அ.வா.முஹ்ஸீன் அவர்களுடனும் மேற்கொண்ட கலந்துரையாடல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. நமது பண்பாட்டு வெளியில் சமயவாதங்களும் கல்விமுறைகளும் கால ஓட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் இறுகிய மனப்பாங்குகள் மௌனப்படுத்தல்கள் கலாச்சாரக் காவல்கள் மூலம் நமது அசைவியக்கத்தை தடைப்படுத்தி இருக்கும் வரலாற்றுக் கட்டத்தில் இந்த உரையாடல் அவற்றை கலைத்தபடியும் உடைத்தபடியும் இன அரசியல் சூழலில் கஜீவனத்திற்கான திசைவழிகளையும் தேடிச் செல்கின்றது.

ஏனைய பதிவுகள்