14467 சித்த மருத்துவம் 1985.

எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி.விமலதாஸ் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 40 + (28) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. யாழ் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. முதலாவது இதழில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் வழங்கிய ஆசிச்செய்தி, யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி என்.பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி, யாழ்.பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.பவானி அவர்கள் வழங்கிய ஆசியுரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வே.ந.சிவராசா அவர்கள் வழங்கிய ஆசியுரை, அன்பார்ந்த வாசகருக்கு என்ற தலைப்பில் மலர் ஆசிரியர் எஸ்.எஸ்.சிவசண்முகராஜா வழங்கிய உரை என்பன ஆரம்பப் பக்கங்களை ஆட்கொண்டுள்ளன. தொடர்ந்து வரும் பக்கங்களில், யாழ்.பல்கலைக் கழகச் சித்த மருத்துவத்துறை ஓர் அறிமுகம், சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஆய்வுகள் அவசியம் (வைத்தியகலாநிதி எஸ்.பவானி), சித்தர்களும் சித்தமருத்துவமும் (கலாநிதி இ.பாலசுந்தரம்), கவிதைகள் தமிழன்னை வாழ்த்துகிறாள் (க.நாகேஸ்வரன்), சித்தர் பெருமை (அ.பிரேமா), ஆராய்ச்சி (ஸ்ரீகாந்தா அருணாசலம்), யோகாசனமும் உடல்நலமும் (என்.சியாமா), The Government and the Indigenous Systems of Medicine (K.Balasingham), Baby to be Born – Boy or Girl! (S.S.Sivashanmugarajah), How to Maintain Good Health? (T.Vasanthy), General Practice in a baffled and confused Community (S.S.Senathirajah), சித்தமருத்துவம் – ஒரு கண்ணோட்டம் (பா.விக்னவேணி), கர்ப்பிணிகளின் உணவு – நடைமுறைகள் பற்றிச் சித்தமருத்துவம் கூறுவதென்ன? (க.இராமசுவாமி), எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் (சித்த மருத்துவ மாணவர் மன்றம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்