14625 நிலா நாழிகை.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-71331-0-2. விசேட கல்வி ஆசிரியரான பாலசுந்தரம் ரஜிந்தன், ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை என்ற ஊரில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார். கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு, வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார். நிலா நாழிகை என்ற இந்நூல், காதல் சார்பான ஒருதலைக் காதல், இரு மனம் இணைந்த காதல், காதலின் இன்பம், துன்பம், பிரிவு என்ற இன்னோரன்ன விடயங்களை சுவைபடக் கூறும் கவிதைகளின் தொகுதியாகும். இவரது கவிதைகளுக்கான கரு சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது நெஞ்சைத் தொடும் முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியே உருவாகின்றன. அந்த வகையில் கரு இரண்டு வகைகளில் உருவாகின்றன ஒன்று உள்ளதை உள்ளபடி கவிநயத்துடன் பதிவு செய்வது, மற்றயது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் கரு. இக்கவிதைத் தொகுதியில் இவை இரண்டையுமே காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

12500 – யாழ். இந்து மகளிர் கல்லூரி: பொன்விழா மலர் 1943-1993.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ்). (10), 132 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. இப்பொன்விழா மலரின் மலர்க்குழுவின்

12671 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2001.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115

14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத்

12114 – மாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2004.

மலர்க்குழு. மட்டக்களப்பு: மாவடிப் பிள்ளையார் ஆலயம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர், 1வது பதிப்பு, 2004. (ஏறாவூர் 4: ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிரதான வீதி). (12), 83 பக்கம், புகைப்படங்கள், விலை:

14121 காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப ; பெருமான் தேவஸ்தானம் மஹாகும்பாபிஷேக மலர் 2003.

மலர்க் குழு. காரைநகர்: சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமான் ஆலயம், பண்டத்தரிப்பான்புலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx,38 பக்கம் +

12995 – இலங்கையில் ஒரு வாரம்.

கல்கி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணமூர்த்தி). சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 1956, 1வது பதிப்பு, ஜனவரி 1954. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை). 96 பக்கம், விலை: