14628 நுங்கு விழிகள் (கவிதைகள்).

இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). (12), 39 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 18×12 சமீ. அக்கினிக் குஞ்சொன்றை அன்றொருநாள் காட்டிடைப் பொந்தில் வைத்து காடே பொசுங்கியதைக் கண்டார் பாரதி. இங்கு அறுபது அக்கினிக் குஞ்சுகளை மனிதக் காட்டின் மனமெனும் பொந்துகளுள் கவிஞர் முரளிதரன் ஹைக்கூ கவிதைகளாகப் பதியம் வைத்திருக்கிறார். யாழ்பாணத்தின் வடமராட்சியினை பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாக கொண்ட இவர் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், சினிமா விமர்சகர், சஞ்சிகையாளர் என விரிந்து செல்லும் ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் கற்றுத்தேர்ந்து பட்டதாரியான இவர், தற்போது ஹாட்லிக் கல்லூரியில் தமிழ் கற்பித்து வருகிறார். இவர் ஏகலைவன் என்னும் சஞ்சிகையின் 7 இதழ்களை வெளியிட்டுமுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14143 தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்புமலர்-2002.

பொன்.புவனேந்திரன் (மலராசிரியர்). கனடா L5 B4 B4: செல்வச்சந்நிதி முருகன் ஆலய மாமணி நிர்மாண சபை, 2584இசுரபடில சுழயனஇ ழே.603இ ஆளைளளைளயரபயஇ ழுவெயசழைஇ 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்,

14080 வைரவர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 18.5×12.5 சமீ.

12180 – வழிபாட்டுத் திரட்டு.

கா.சிவபாதசுந்தரம் (தலைவர்). யாழ்ப்பாணம்: தையிட்டி இந்து இளைஞர் சங்கம், தையிட்டி, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சு நிலையம்). 72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தையிட்டி, இலங்கையின்