மீரா குகன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×11 சமீ., ISBN: 978-955-4096-02-8. ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தும் தாயக நினைவுகளுடன் வாழும் உறவொன்றின் பறவையாய் மாறிய பறப்புகளே இந்தக் கவிதைகள். மீரா குகன், ஈழத்துப் படைப்பாளி. கொழும்பு-பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி. வர்த்தக முகாமைத்துவ பாடநெறியை நிறைவுசெய்து ஹட்டன் நெஷனல் வங்கியில் சிலகாலம் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து ஜேர்மன் தேசம் சென்றபின்னர் ஜேர்மன்-தமிழ் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் “வெற்றி” நிறுவனத்தின் பகுதிநேர செயற்பாட்டாளராகவும், இணையத்தள நிர்வகிப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. காதலும், தத்துவமும், சமூகப் பிரச்சினைகளும், விடியல் நமக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுமாக இக்கவிதைகள் விரிகின்றன.
Publication from Ra On the web Slot in britain
Articles Volatility and you may RTP Even though it is simple, there are various tips and tricks you have to know in regards to the