14641 மடிவேன் என்று நினைத்தாயா?

மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-4041-15-8. இலக்கியம் என்பது மக்களுக்கானது என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவரான மு.தயாளனின் 60 மரபுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் மரபு சார்ந்து இருந்தாலும் அவை சொல்ல வந்த விடயங்கள், நவீன சிந்தனை கொண்டவை. மரபும்-நவீனமும் இங்கு கைகுலுக்கிக் கொள்கின்றன. இவரது கவிதைகள் வாசிக்க இலகுவானவை மாத்திரமல்ல. ஓசை நயத்துடன் பாமர மக்களும் அவற்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்நூல் மகுடம் வெளியிட்டகத்தின் 21ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14850 நான் பேசும் இலக்கியம்.

கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 128 பக்கம், சித்திரங்கள்,