14661 விளம்பரம் ஒட்டாதீர்.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). viii, 46 பக்கம், விலை: ரூபா 150.,அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-4096-05-9. கவிஞர் கேஜீயின் புதுக்கவிதைகளின் தொகுப்பு. துளிர் என்ற தொகுப்பின்மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் ப.கனகேஸ்வரன். இவரது கவிதைகளில் புதுமைகள் இருக்கும். அனுபவத்தை கவித்துவத்துடன் சுருக்கமாகச் சொல்லிச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. மேலோட்டமாக வாசிக்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இவரது கவிதைகளின் உள்ளோட்டம் ஆழமான கருத்தைப் பொதிந்து வைத்திருப்பதை தீவிர வாசகர்கள் உணரலாம். பசுமையைப் போற்றும் பாங்கு இவரது கவிதைகளில் துலக்கமாகக் காணப்படுகின்றது. மரங்களைப் பாதுகாத்து இயற்கையைப் பேணுதல், சீவகாருண்யம், சூழல் மாசுபடுதலுக்கான எதிர்ப்புக்குரல்கள் என்பவை இவருடையவை.

ஏனைய பதிவுகள்

12093 – இந்து தருமம் 1991-1992: பேராதனை பல்கலைக்கழக பொன்விழா சிறப்பு மலர்.

த.வேலுப்பிள்ளை (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1992. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டுகொடல்ல வீதி). x, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5

16362 கலையிலிருந்து வாண்மை வடிவமாக இசைக் கலை : இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டினடியான பார்வை.

சுகன்யா அரவிந்தன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  xii, 124 பக்கம், விலை: ரூபா 760.,