14690 கறுத்த கோடுகள்: சிறுகதைகள்.

ஏ.எஸ்.எம்.நவாஸ். கொழும்பு 14: திருமதி ஹபீலா நவாஸ், சினிலேன்ட் பதிப்பகம், 1வது பதிப்பு, 2017. (வத்தளை: ஏஞ்சல் அச்சகம்). 89 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38038-0-1. எண்பதுகளில் தனது மணிக் கவிதையை சிந்தாமணி (தினபதி-சிந்தாமனி)யில் வடித்த ஏ.எஸ்.எம்.நவாஸ், கால் நூற்றாண்டையும் கடந்து தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இன்னமும் எழுதிவருகின்றார். 1995-2015 காலகட்டத்தில் மித்திரன், தினகரன், மல்லிகை, இருக்கிறம், இனிய நந்தவனம், ஆகிய ஊடகங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் தேர்ந்த 14 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கருவைத் தொட்ட உயிர் (மித்திரன், 1995), யாழ்ப்பாணம் பார்ப்போமா? (2002), கறுத்த கோடுகள் (தினகரன், 2006), பொறியில் எலி (மல்லிகை, 2008), நிழல் (மல்லிகை, 2006), திறப்பு (மல்லிகை 2008), அவன் அவள் (இருக்கிறம், 2008), அந்த ஒன்றுக்காக (2010), அம்மாவின் அழகான மனசு (இனிய நந்தவனம், 2010), பரிசோதனைகள் (தினகரன், 2011), மோசமானவர்கள் (மித்திரன், 2013), பசிக்குள் பசி (மித்திரன், 2014), தலைகுனிவு (மித்திரன், 2015), மண்ணின் மணம் (மல்லிகை, 2006) ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13049 ஆன்றோர் அருளிய ஆயிரத்தொரு அருள்மொழிகள்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 230 பக்கம், விலை: ரூபா