14713 மலைமகள் கதைகள்.

மலைமகள். சென்னை 600024: வடலி வெளியீடு, F-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 8A, அழகிரி நகர் 4வது குறுக்குத் தெரு, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 103 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9919755- 5-6. பதினைந்து கதைகள் அடங்கிய இத்தொகுதி பல தளங்களில் முக்கியமானது. அவர் எழுதிய விலை, எதுவரை, ஒரு கோப்பை தேநீர், முறுங்கையை விட்டு இறங்காதவர்கள், புதிய கதைகள், பயணம், அங்கோர் காட்டிடைப் பொந்திலே, யாரோ யார் இவர் யாரோ?, யார் உன்னை அழைத்தார், கதவுகள் திறந்துதான் உள்ளன, எனது மனிதர்கள்-1, எனது மனிதர்கள்-2, அனுமதி, முற்றுகை, இறுதி வணக்கம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பெற்றவை. திரும்பிப் பார்த்தல் என்பதற்ற போர்க்களத்தில் உரிய வேளையில் துப்பாக்கி ஒரு கணம் தாமதித்தாலும் தம் உயிர் மௌனித்துவிடும் ஆபத்து நிறைந்ததான களங்களில் இந்தப் பெண்கள் எவ்வளவு லாவகமாக “எதிரியை” எதிர்கொண்டார்கள், உயிரைத் துச்சமென மதித்து தாம் நம்பிய விடுதலைக்காகப் போராடினார்கள், கூடவே “வெளியில்” மரபான சமூகத்தால் மலரிலும் மென்மையானதென அணுகப்பட்ட உடல் உறுப்புகள் எவ்வாறு தமக்கான மரபான பணிகளை மீறி “வழமை”யை உடைத்து இயங்கின என்பதைக் காப்பரண்களும் வேலிகளும் போட்ட காந்தள் விரல்களால் எழுதிச் செல்கிறார் மலைமகள். இந்நூலின் பின்னிணைப்புகளாக, காலத்தின் சாட்சி-முதலாவது பதிப்பிற்கான தாமரைச்செல்வியின் முன்னுரை, புதையல் – என்ற தலைப்பில் ஆ.உலகமங்கை எழுதிய முதலாம் பதிப்பிற்கான பதிப்புரை, சொல்லாத செய்திகள் – என்ற தலைப்பில் மலைமகள் முதற்பதிப்பிற்கு எழுதிய பின்னுரை ஆகியன இடம்பெற்றுள்ளன. மலைமகள் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மாலதி படையணியில் 2ஆம் லெப்டினன்ட் தரப் போராளியாவார். இந்நூலின் முதற் பதிப்பு, கப்டன் வானதி வெளியீட்டகத்தினால், கிளிநொச்சியிலிருந்து 2004இல் வெளியிடப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

14881 வியத்தகு புராதன விஞ்ஞானிகள்: மாயன்கள்-நாகர்கள்.

செல்வத்துரை குருபாதம். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xviii, (10),

14664 பூவரசம்பூ.

மகாகவி அல்லாமா இக்பால் (உருது மூலம்), வ.அ.இராசரத்தினம் (தமிழாக்கம்). மூதூர்: தங்கம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (மூதூர்: அமுதா அச்சகம்). 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ. மகாகவி

14165 மணிமொழிகள்: நாவலர் மணிமண்டப திறப்புவிழா நினைவுமலர் 19.05.1995.

மலர்க் குழு. கொழும்பு 15: வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40, கோவில் வீதி, 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 152 பக்கம், புகைப்படங்கள்,

14296 பொருளியற் பாகுபாடு.

எப்.ஆர்.சயசூரியா (சிங்கள மூலம்), ம.முகம்மது உவைஸ் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). (6), 201 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,

12268 – நம் அனைவரதும் நாடு.

சுமனசிறி லியனகே. கொழும்பு: திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு, இன விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்). (4), 28 பக்கம், சித்திரங்கள்,

12184 – ஸ்ரீ லலிதா கட்கமாலா, ஸஹஸ்ரநாமம், த்ரிஸதி.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: தில்லைநாயகி அம்மையார் நினைவு வெளியீடு, 109/4 மனிங் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை).