14728 ஜீவநதி சிறுகதைகள் தொகுதி 1.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 216 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-3148-8. இத்தொகுப்பில் காணி நிலத்திடையே (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), தாய்மாமன் (தெணியான்), பாண் போறணை (கே.ஆர்.டேவிட்), காலிழப்பும் பின்பும் (குந்தவை), கருமுகில் மூடாத வானம் (செங்கை ஆழியான்), நிழல் கொஞ்சம் தா (பவானி சிவகுமாரன்), பேரிளமை (க.சட்டநாதன்), கசிவு (த.கலாமணி), தாய்மை (எம்.எஸ்.அமானுல்லா), குடை (சந்திரகாந்தா முருகானந்தன்), சிதைவுகள் (ப.ஆப்டீன்), பள்ளிவாசலும் பத்து ரூபாவும் (திக்குவல்லை கமால்), கனவாய் கானலாய் (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), கெடுபிடி (தாட்சாயணி), குழந்தைகள் உலகம் (ச.முருகானந்தன்), வெள்ளைப் புறா (க.நவம்), சமூக மேம்படுத்துநர்கள் (அருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின்), சப்பைக்கட்டு (இ.இராஜேஸ்கண்ணன்), கறுப்பும் வெள்ளையும் (கெக்கிறாவ ஸஹானா), வண்ணக்குளம் (அன்புமணி), ஆர்கொலோ (அ.விஷ்ணுவர்த்தினி), தவிப்பு (மு.அநாதரட்சகன்), மீண்டும் துளிர்ப்போம் (க.பரணீதரன்), சுபியானின் சாகசங்கள் (அஷ்ரஃப் சிஹாப்தீன்), உதயம் (கார்த்திகாயினி சுபேஷ்) ஆகிய 25 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்