14773 நதிமேல் தனித்தலையும் சிறுபுள்.

தேவகாந்தன். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், தேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 600005: சாய் தென்றல் பிரின்டர்ஸ்). (6), 7-104 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81- 939017-3-1. “மூதினங்கள் பலவற்றின் ஐதீகங்களிலும் உள்ளோடியுள்ள ஆன்மீக ஒருமையே இந்நாவலின் ஆதாரமாய் அமைகின்றது. நைல் ஆரஸ் தைகிரிஸ் நதிதீர இனக் குழுமங்களினதைப் போலவே, நீர்வளமேயற்ற இலங்கை வடபகுதியிலுள்ள தமிழ்க் குமுகாயத்தின் ஐதீகங்களும் ரத்தமும் சோகமுமான நீள் வரலாறுகொண்ட கனடாவின் செந்நதிதீரத்தில் கொள்ளும் உறவு தமிழ் நாவல் பரப்பின் புதிய பிரதேசம். சிவப்பிரகாசமும் மங்களநாயகியும் வின்ஸியும் ஒரே சமூகத்தினதும் கலாசாரத்தினதும் பிரதிநிதிகள்தான். ஆயினும் புத்துலகின் இறுகும் கண்ணிகளிடையே ஒரு புள்ளியில் எவ்வாறு அவர்கள் இணங்கியும் பிணங்கியும் சேர்ந்தும் பிரிந்தும் மகிழ்ந்தும் துயருற்றுமான நொருங்கிய மனநிலைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதையே நாவலின் மய்யம் உணர்த்துகிறது. இத்துடன் ஒப்புநோக்குகையில் வெவ்வேறு கலாசார பின்னணிகொண்ட சிவப்பிரகாசமும் கிநாரியும் கொள்ளும் உறவுச் சிக்கல்கள் பெரிய அதிர்ச்சியைத் தருவதில்லை. ஆனால் அவற்றின் மூலமாக மனித உறவின் விழுமியங்களே இருப்பது பேரதிசயமாக நாவலில் விரிகின்றது. புலப்பெயர்வின் சோகம் பெருமளவு கரைந்தாயிற்று. இன்றைய புதிய உலகச் சூழ்நிலையில் ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் கொள்ளும் புதிய பிரச்சினைகள் படைப்புலகின் பேசு பொருளாயிருக்கின்றன. ஆங்கில புலம்பெயர் நாவல் இலக்கியத்தில் இவை ஏற்கனவே பேசப்பட்ட பொருள். தமிழ் இப்போதுதான் இப்புதிய பிரதேசத்தைச் சென்றடைந்திருக்கிறது. ஆனாலும் தமிழினத்தின் ஆயிரமாயிரமாண்டுக் கலாசார பின்னணியில் இவைகொள்ளும் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான சங்காத்தங்கள் துல்லியமான பிரிகோடுடையவை. மேற்குலகும் கீழ்த்திசையும் வெகு கவனம் கொண்டிருக்கிற விமர்சனப் பக்கமிது. “நதிமேல் தனித்தலையும் சிறுபுள்” இவற்றை ஒரு ஒழுங்கிலும் சமகால வரலாற்றிலும் வைத்து புரிய முயல்கிறது. இப் புரிதல் இச்சமூகங்களது இருத்தலின் தன்மையை இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்போகின்ற அளவு முதன்மை கொண்டிருக்கிறது. கலையை முதன்மைப் படுத்தினாலும் இதைப் பேசுகிற அக்கறையை இப்படைப்பு தன் அறமாகக் கொண்டிருக்கிறது.” (தேவகாந்தன் -என்னுரையில்).

ஏனைய பதிவுகள்

12719 – சதுரங்கத்தின்அடிப்படைகளும் தொடக்க முறைகளும்.

சி.வித்தியாதரன். யாழ்ப்பாணம்: ஹரி கஸ்பரோவ் சதுரங்க அக்கடமி (புயசசல முயளியசழஎ ஊhநளள யுஉயனநஅல)இ ழே.5, வைமன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: சிமாட் பிரின்டர்ஸ், இல. 717 காங்கேசன்துறை வீதி).

14674 உலக காவியம்: அறிவியல் ஆன்மீக காவியம்.

பாரதிபாலன் (இயற்பெயர்: ஜெயகுமார் குமாரசுவாமி). யாழ்ப்பாணம்: மகரிஷி பதிப்பகம், 55, ஆடியபாதம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). (24), 98 பக்கம்,

14756 கலாபன் கதை (நாவல்).

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-199 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21×14 சமீ.,

12459 – கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர்.

12459 கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர். ஆ.சுப்பிரமணியம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், கரவை விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்,

14322 இலங்கையில் ஐக்கிய நாடுகள்.

ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம். கொழும்பு: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (12), 56 பக்கம், புகைப்படங்கள்,