14795 மர்மப் பெண்: திகில் சித்திரம்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட்). (2), 126 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.90, அளவு: 18×12 சமீ. ஈழத்தின் மர்ம நாவல் மற்றும் துப்பறியும் நாவல் பாரம்பரியம் பற்றி ஆய்வுசெய்யப்புகும் எவருக்கும் ஜனமித்திரன் வெளியீடுகள் தவிர்க்கமுடியாதவை. விறுவிறுப்பான மர்மநாவலாக வளர்த்துச் செல்லப்படும் மர்மப் பெண் என்ற திகில் சித்திரத்தின் அத்தியாயத் தலைப்புகளே சுவாரஸ்யமானவை. எலும்புக்கூடு நகர்ந்தது, பிணம் பேசியது, ஆவி உலகம், மாயத்தீ, மோகினிப் பேய், கீதாவின் குரல், அறையில் கண்ட அதிசயம், கதவைத்தட்டிய கை, சுருளி வந்தான், டாக்டர் மனிதனா, நாய்கள் ஓலமிட்டன, நிர்வாணப் பெண், மர்ம மரணம், கீதாவின் குழப்பம், கீதாவின் மூளை குழம்பியது, உயிர்ப் பரீட்சை, பசியைக் கொன்ற பாதகி, மாயக் குளிகைகள், காதல் மயக்கம், பாழடைந்த மண்டபம், பயங்கர டாக்டர், அசுர உருவம், மர்ம நிழல், அழுகிய அழகி கொலை, டாக்டரின் டயறி ஆகிய 25 அத்தியாயங்களில் இந்நாவல் விறுவிறுப்பாக நகர்த்திச்செல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம், இணுவிலில் பிறந்த கா.சச்சிதானந்தம் அவர்கள் கே.எஸ்.ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் அறியப்பட்டவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018639).

ஏனைய பதிவுகள்

12202 – சமூகக் கல்வி: 10ஆம் ஆண்டு.

ஹயசிந்த் தஹநாயக்க, எம்.சீ. த சில்வா, பத்மினீ என்.பெரேரா, ரஞ்சினி சேனாநாயக்க (பதிப்பாசிரியர்கள்), எம்.எம்.றாசீக், திருமதி பீ.சிவகுமாரன், எம்.எச்.எம்.ஹசன் (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 6வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு,

14022 தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன் (பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரை).

தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, வைகாசி 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 40 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22

14729 கைக்குட்டை: சிறுகதைகள்.

டபிள்யூ. ஏ.சில்வா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,

12110 – திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்.

எஸ். திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.திருச்செல்வம், தலங்காவற் பிள்ளையார் கோவில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம்). (52) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ. மேற்படி

12052 – காயத்ரி என்றால் என்ன?

தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் ஸ்ரீலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11.5 சமீ.