14812 வலசைப் பறவைகள்.

சிவ.ஆரூரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 230 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-0958-22-1. எமது சமகாலப் பிரச்சினைகளை மிகத்திறம்பட உணர்த்துவதில் சிவ ஆரூரன் வெற்றிகண்டுள்ளார். நம் இனம் அனுபவித்த, அனுபவித்து வருகின்ற இடர்மிகுந்த வாழ்வை தன் படைப்புகளின் வாயிலாக உயிரோட்டமாகப் படைப்பதில் சிவ.ஆரூரனின் திறன் வியக்கவைக்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த 1987-1990 காலப்பகுதியில் கதை நிகழ்கின்றது. அக்காலப் போர்ச் சூழல் எவ்வாறு கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களில் தாக்கம் செலுத்தியது என்பதை இக்கதை சொல்கின்றது. அருமையான கதை நகர்வும் பாத்திரங்களின் தேர்வும் மொழித் தேர்ச்சியும் அனுபவ வெளிப்பாடுகளும் மிகச்சிறந்த முறையில் கையாளப்படுகின்றன. இலங்கை அரசின் சிறைச்சாலைக்குள்ளிருந்து பூக்கும் சிவ.ஆரூரனின் ஐந்தாவது நூலாகவும், மூன்றாவது தமிழ் நாவலாகவும் வெளிவரும் இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 133ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. இவரது நாவலொன்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12704 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்3: அக்டோபர்-டிசம்பர்-2002.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்).சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு:விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை: கணேசமூர்த்தி,ஜோதி என்டர்பிரைசஸ்). 175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12471 – செழுந்தமிழச் சிகரம் சிறப்புமலர்;2005 (அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் ).

எஸ்.சிவநிர்த்தானந்தா (பொறுப்பாசிரியர்). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xx, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ. கல்வி அமைச்சின் தமிழ்மொழிப்